சென்னை பயணம் மறக்க முடியாதவை - பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் ட்வீட்!

Update: 2022-07-29 11:05 GMT

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று (ஜூலை 28) சென்னை வருகை புரிந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் கிண்டியில் உள்ள உள்ள ராஜ்பவனில் தங்கினார். அதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் இன்று (ஜூலை 29) பங்கேற்று பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி படிப்புகளில் முதல் இடத்தை பிடித்த 69 மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். இந்த விழாவை முடித்துக்கொண்டு மீண்டும் அகமதாபாத்துக்கு பிரதமர் மோடி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், சென்னை பயணம் மறக்க முடியாதவையே அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி சென்னை சுற்றுப்பயணம் பற்றிய வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இதனை பல லட்சக்கணக்கான பா.ஜ.க., தொண்டர்கள் ரீ ட்விட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source,Image Courtesy: Twitter

Tags:    

Similar News