ராகுலுக்காக போராட சென்ற ப.சிதம்பரத்துக்கு கையில் எலும்பு முறிவு!

Update: 2022-06-14 10:18 GMT

டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்ற பேரணியில் ப.சிதம்பரத்திற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு பற்றி விசாரிப்பதற்காக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியை நேற்று (ஜூன் 13) ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

அதன்படி அவர் நேற்று ஆஜரானார். ராகுல்காந்திக்கு எப்படி சம்மன் அனுப்பலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் திடீரென்று பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போன்று டெல்லியில் ராகுல்காந்தி ஆஜராவதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியினர் பேரணி ஒன்றை நடத்தினர். இந்த பேரணியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. பேரணியில் போலீசார் தாக்கியதால் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி சார்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இது குறித்து சிதம்பரம் கூறுகையில், நான் விரைவில் குணமடைந்துவிடுவேன் என குறிப்பிட்டிருந்தார்.

Source: Polimer

Image Courtesy:Kalinga Tv

Tags:    

Similar News