5ம் கட்டமாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் இன்று பிரச்சாரம்.!

5ம் கட்டமாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் இன்று பிரச்சாரம்.!

Update: 2021-02-09 09:19 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற சூழலில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடந்த மாதமே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5வது கட்டமாக இன்று ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதில் அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட கணபதிநகர், கைனூர் பகுதிகளில், காலை 10.30 மணிக்கு மகளிர் சுயஉதவிக்குழுக்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதன் பின்னர் முதலமைச்சர் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

சோளிங்கர் தொகுதிகுட்பட்ட பாண்டியநல்லூர், அப்பகுதியில் உள்ள இளைஞர், இளம்பெண்கள் பாசறை, ஐடி விங் நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை, அணைக்கட்டு தொகுதிகளில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார். இறுதியாக வேலூர் அண்ணா கலையரங்கத்தில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

Similar News