கொரோனா நோயாளிகளுக்காக செயல்பட்டவர் விஜயபாஸ்கர்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டையில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக முதலமைச்சர் பரப்புரை செய்து வருகிறார்.

Update: 2021-03-16 11:56 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டையில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக முதலமைச்சர் பரப்புரை செய்து வருகிறார்.




 


அப்போது முதலமைச்சர் பேசியதாவது: ''சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மிகவும் திறம்பட பணியாற்றியதால் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா சமயத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் அன்பை பெற்றவர். எனவே விராலிமலை மக்கள் இவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News