கோவை: பாகோடு பேரூராட்சி 1வது வார்டில் பா.ஜ.க. வெற்றி!

கோவை மாவட்டம், பாகோடு பேரூராட்சியில் பாஜக வேட்பாளர் பி.துளசி பாய் வெற்றி பெற்றுள்ளார்.

Update: 2022-02-22 05:36 GMT

கோவை மாவட்டம், பாகோடு பேரூராட்சியில் பாஜக வேட்பாளர் பி.துளசி பாய் வெற்றி பெற்றுள்ளார்.

கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தனித்து களம் கண்ட பாஜக பல பேரூராட்சி மற்றும் நகராட்சி, மாநகராட்சி வார்டுகளில் வெற்றியை குவித்து வருகிறது.

அந்த வகையில் கோவை மாவட்டம், பாகோடு பேரூராட்சி 1வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட துளசி பாய் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இதனால் பேரூராட்சி அலுவலகத்துக்கு பாஜக செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News