காங்கிரஸ் கட்சியின் கண்களில் தவறு: காங்கிரஸ் அறிக்கைக்கு பா.ஜ.க. பதிலடி!

Update: 2022-05-28 13:34 GMT

பா.ஜ.க.வின் 8 ஆண்டுகால ஆட்சியை விமர்சனம் செய்து ஒரு அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டது. இதற்கு பா.ஜ.க. எம்.பி. சுதன்ஷு திரிவேதி, காங்கிரஸ் தனது தொலைநோக்கு பார்வையை இழந்துவிட்டது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சியை பிடித்து தற்போது 8 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்நிலையில், பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான சுதன்ஷு திரிவேதி, காங்கிரஸ் தனது தொலைநோக்கு பார்வையை இழந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சியை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை அவர் கூறினார். அதாவது முதன் முறையாக இந்தியாவில், பாதுகாப்புத்துறையில் முழுமையான சுயசார்பு உள்ளது. இதனை காண முடியவில்லை என்றால், தவறு அவர்களின் கண்களில்தான். ஆனால், காங்கிரஸ் தனது தொலைநோக்கு பார்வையையும், சிந்தனையையும் இழந்துவிட்டது.

பிரதமர் மோடி தலைமையில் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. இது நமது அண்டை நாடுகளாலும் இருந்தாலும், சரி ஐரோப்பாவாக இருந்தாலும் சரி அங்கு எல்லாம் பணவீக்க விகிதமானது இரட்டை இலக்கத்தில் அல்லது மிக அதிகமாகவும் உள்ளது. ஆனால் நமது நாட்டின் வளர்ச்சி 8.5 சதவீதகமாகவும், பணவீக்க விகிதம் 7.5 சதவீதமாகவும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News