சாதியப் பாகுபாடு நிறைந்த கட்சி காங்கிரஸ் - ஹர்திக் படேல் கடும் தாக்கு

Update: 2022-05-20 14:15 GMT

ராகுல் காந்தி பங்கேற்ற ஆதிவாசி சத்தியாகிரகப் பேரணியில் வெறும் 25 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆனால் 70 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக கணக்கு காட்டியுள்ளனர் என்று ஹர்திக் படேல் கூறியுள்ளார். ஹர்திக் படேல் கடந்த 2015ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் படிதார் சமூகத்தின் இடஒதுக்கீடுக்காக போராட்டத்திற்கு கலந்து கொண்டு தலைமை ஏற்று நடத்தினார். அதன் பின்னர் கடந்த 2020ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் நல்ல வழிக்கு கொண்டு செல்வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அக்கட்சி தொடர்ந்து சமூகத்தின் நலனுக்காக செயல்படுவதாக கூறி அக்கட்சியில் இருந்து ஹர்திக் படேல் விலகி கொண்டார்.

இது குறித்து மேலும் அவர் கூறும்போது, காங்கிரஸ் கட்சியில் சாதியப் பாகுபாடு நிறைந்த கட்சியாக உள்ளது. அக்கட்சியில் எனக்கு இரண்டு ஆண்டுகளாக எவ்வித பொறுப்பும் வழங்கவில்லை. அதே நேரத்தில் பா.ஜ.க.வில் இணைவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. எனது சமூதாயத்தினர் மத்தியில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது நண்பர்கள் சொல்லியும் நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டேன். அதன் காரணத்தை தற்போது உணர்ந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Vikatan

Image Courtesy: National Herald

Tags:    

Similar News