தேர்தல் தோல்வியை தாங்கிக்க முடியாமல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தகண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

Update: 2022-03-10 07:09 GMT

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தகண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி 5 மாநிலங்களில் பாஜக 4 மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது. எனவே காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. மேலும், பஞ்சாபிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. இதனால் தேசிய அளவில் மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் உள்ளது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகும்.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்னர் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லு முல்லு நடந்திருப்பதாக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அப்படி பார்த்தால் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளதற்கும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம்தான் காரணம் என்று சொல்லுவார்களா.

Tags:    

Similar News