பயிர்க்கடன் தள்ளுபடி: பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை வரவேற்பு.!

பயிர்க்கடன் தள்ளுபடி: பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை வரவேற்பு.!

Update: 2021-02-06 18:04 GMT

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பயிர்கடன் தள்ளுபடிக்கு தமிழக பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள நஞ்சன்பதி மலை கிராமத்திற்கு சென்ற பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை பேசியதாவது: நஞ்சன்பதி கிராமத்தில் மின்சார வசதி இல்லை. எனவே மத்திய அரசின் திட்டதத்ன் கீழ் விரைவில் மின்சார வசதி செய்து கொடுக்கப்படும்.

இரண்டு புயல்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ள நிலையில், பயிர்க்கடனை தள்ளுபடி செய்த முதலமைச்சர் அறிவிப்பை பாஜக வரவேற்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Similar News