பயிர்கடன் தள்ளுபடி: 15 நாளில் ரசீது கிடைக்கும்.. முதலமைச்சர் தகவல்.!

பயிர்கடன் தள்ளுபடி: 15 நாளில் ரசீது கிடைக்கும்.. முதலமைச்சர் தகவல்.!

Update: 2021-02-09 12:17 GMT

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உள்ள ரூ.12,110 கோடி பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். இதன் பின்னர் நேற்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக தள்ளுபடிக்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அரக்கோணத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூறினார்.

தமிழக அரசு அறிவிப்பை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளில் உள்ள கடன் விவரங்கள் பற்றிய தகவல்கள் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக எடுக்கப்பட்டு வருகிறது. 
 

Similar News