கடந்த ஆண்டு தேவர் குருபூஜையில் விபூதியை கீழே கொட்டிய ஸ்டாலின் இந்த ஆண்டும் தேவர் குருபூஜைக்கு வருகிறார் !

Update: 2021-10-22 00:30 GMT

வரும் அக்டோபர் 30'ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவரின் 114'வது ஜெயந்தி விழா மற்றும் 59'வது குருபூஜை விழா வருகிற 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. தேவர் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, "அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தேவருக்கு மரியாதை செலுத்த வருகை தருகிறார். மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகள் என ஏராளமானோர் வருவார்கள். எனவே போதிய பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

கடந்த ஆண்டு தேவரின் குருபூஜை விழாவில் ஸ்டாலின் அங்கு வழங்கப்பட்ட விபூதியை கீழே கொட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடதக்கது.


Source - Maalai malar

Tags:    

Similar News