ஏழை, எளியோர்களுக்காக அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது.. தருமபுரி பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.!

தருமபுரி மாவட்டத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

Update: 2021-03-22 12:02 GMT

தருமபுரி மாவட்டத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.


 



இந்த தேர்தல் பிரச்சாரம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அதிமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஏழை, எளியோர்களுக்காக செயல்பட்டு வருகிறது.

தருமபுரியில் பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி மற்றும் அரசு கலைக்கல்லூரி, வேளாண்கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளை இந்த மண்ணிற்கு அம்மா அரசு செயல்படுத்தியுள்ளது.


 



மேலும், மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி, இலவச பேருந்து பாஸ் உட்பட எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர் அன்பழகனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Similar News