தருமபுரி பா.ம.க. வேட்பாளர் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு.!

பாமக வேட்பாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரனுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும், பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Update: 2021-03-27 07:19 GMT

தருமபுரி சட்டமன்ற தொகுதியில் பாமக வேட்பாளராக எஸ்.பி.வெங்கடேஸ்வரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ., தடங்கம் சுப்பிரமணியன் மீண்டும் போட்டியிடுகிறார்.

அதே போன்று நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பாகவும் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், பாமக வேட்பாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரனுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும், பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.


 



இந்நிலையில், பாமக வேட்பாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் இன்று நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட பூதனஅள்ளி ஊராட்சி, கோபாலம்பட்டியில் வாக்கு சேகரித்தார். அதே போன்று மற்ற கிராமங்களிலும் வீடு, வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகள் பற்றி எடுத்துரைத்து வாக்கு சேகரித்து வருகிறார்.

அவருடன் அதிமுக நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் மற்றும் பாஜக நிர்வாகிகள், உள்ளிட்டோர்கள் பலர் இருந்தனர்.

Similar News