தருமபுரி நகரில் அதிகாலை முதலே பா.ம.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்து போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-03-19 07:16 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்து போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், அதிமுக, பாமக, பாஜக, தமாகா வேட்பாளர்கள் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.


 



அந்த வகையில் தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் கூட்டணி கட்சிகளுடன் சென்று தருமபுரி நகரில் அதிகாலை முதலே மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

அவருடன் தருமபுரி அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி மற்றும் பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் செல்கின்றனர். செல்லும் இடங்களில் தனக்கு ஆதரவு பெருகி வருகிறது என்று வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News