திராவிட மாடல் பயிற்சி கூட்டம்: மேயருக்கு நாற்காலி போடாமல் புறக்கணித்த தி.மு.க எம்.எல்.ஏ!

Update: 2022-07-13 13:35 GMT

தி.மு.க., எம்.எல்.ஏ., இராஜேந்திரன் சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டும் வி.ஜ.பி. நாற்காலி அமைத்துவிட்டு மேயருக்கு நாற்காலி அளிக்காமல் புறக்கணித்துள்ள சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் தி.மு.க., இளைஞரணி சார்பாக திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சேலம் மத்திய மாவட்டக் செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான இராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் திருச்சி சிவா மற்றும் கொறடா செழியன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், மாநகரத்தில் கூட்டம் நடைபெறுவதால் தி.மு.க., கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

அதே போன்று மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனும் திராவிட மாடல் பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் கூட்டம் தொடங்கியதும் மேயர் செல்லவில்லை. அதாவது எம்.எல்.ஏ., ராஜேந்திரன் சிறப்பு விருந்தினர்களுக்க மட்டுமே வி.ஐ.பி., நாற்காலி அமைத்துள்ளார். மேயருக்கான நாற்காலி போடாமல் புறக்கணித்துள்ளார்.

இதனை அறிந்த மேயர் தனது ஆதரவாளர்களுடன் அரங்குக்கு வெளியில் போய் அமர்ந்து கொண்டார். மேயர் வெளியில் அமர்ந்திருப்பதை பார்த்த தி.மு.க., தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு வேளை மேயர் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியில் வந்துவிட்டாரா என்ற பேச்சுகளும் அடிப்பட்டது. திராவிட மாடல் பயிற்சி கூட்டத்தில் மேயருக்கே நாற்காலி ஒதுக்கப்படாதது சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News