ம.தி.மு.க.வை தி.மு.க.வில் இணைத்து விடுங்கள்: வைகோவுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று 10 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி!

Update: 2022-03-21 10:59 GMT

மதிமுகவை பொதுச்செயலாளர் வைகோவுக்கு இனிமேல் ஒத்துழைப்பு தருவதில்லை எனவும், கட்சியை திமுகவில் இணைத்து விடட்டும் எனவும் 10 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் சிவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதிமுக பொதுச்செயலாளர் கட்சியின் கொள்கைக்கு விரோதமாக செயல்படுகிறார். இந்த கட்சியானது திமுகவில் இருந்து பிரியும்போது திமுகவில் குடும்ப அரசியல் உள்ளது என்று சொல்லி பிரிந்தது.

ஆனால் தற்போது அதே நிலையில் வாரிசு அரசியல் தொடர்கிறது. வைகோ தனது மகனை மதிமுக துணைப்பொதுச் செயலாளராக மாற்ற துடித்து வருகிறார். அவரது முடிவு எங்களுக்கு பிடிக்கவில்லை. தற்போது இவரின் கொள்கைக்கு தமிழகத்தில் மட்டும் 10 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source: Daily Thanthi

Image Courtesy: Vikatan

Tags:    

Similar News