எதிர்பார்த்த தொகுதி அ.ம.மு.க.விலும் கிடைக்கல.. தனித்து போட்டியிட தயாராகும் தே.மு.தி.க.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது.

Update: 2021-03-11 10:11 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது.

இதன் பின்னர் அவர்கள் அமமுக தினகரன் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் தேமுதிக எதிர்பார்த்த தொகுதிகள் ஒதுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த தேமுதிக தனித்து களம் இறங்க முடிவு செய்துள்ளனர். இதனால் தேமுதிக தொண்டர்கள் மிகவும் சோர்ந்து காணப்படுகின்றனர். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தாலும் ஏதோ குறைந்த தொகுதிகளையாவது கைப்பற்றியிருப்போம்.




 


ஆனால் தற்போது இருக்கின்ற நிலைமையில் தனித்து போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று புலம்பி வரும் தொண்டர்களை காணமுடிகிறது. ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதால்தான் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதற்கு காரணம் ஆகும்.

Similar News