தோல்வியை நினைத்து நெஞ்சு வலியால் கீழே விழுந்த தி.மு.க. வேட்பாளர்!

தேனியில் தோல்வி காரணமாக திமுக வேட்பாளர் ஒருவர் நெஞ்சுவலியால் மயக்கம் போட்டு கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-02-22 08:09 GMT

தேனியில் தோல்வி காரணமாக திமுக வேட்பாளர் ஒருவர் நெஞ்சுவலியால் மயக்கம் போட்டு கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது 3வது வார்டு முடிவுகள் வெளியானது. அப்போது அந்த வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திக் தோல்வி என அறிவிக்கப்பட்டது. இதனை கேள்விப்பட்டதும் நெஞ்சுவலியால் கீழே விழுந்து மயக்கம் போட்டார்.

அங்கு இருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அரசியலை பொறுத்தவரையில் வெற்றி, தோல்வியை சந்திக்கும் பக்குவம் வேண்டும். இப்படி இல்லை என்றால் இது போன்ற விபரீதம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவு உண்டு.

Tags:    

Similar News