அ.தி.மு.க. கொண்டு வந்ததால் வன்னியர் இடஒதுக்கீட்டில் தி.மு.க. சரியாக வாதாடவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Update: 2022-04-02 12:20 GMT

அதிமுக ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்த வன்னியர் இடஒதுக்கீட்டில் திமுக அரசு சரியான வாதத்தை முன்வைக்காததால் உச்சநீதிமன்றம் ரத்து செய்தாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: வன்னியர் உள்ஒதுக்கீடு வழக்கில் திமுக அரசு சரியான வாதத்தை முன்வைக்கவில்லை. உள்ஒதுக்கீட்டை எப்படியும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு சரியான வாதத்தை முன்வைக்கவில்லை. இது பற்றி நீதிபதியே கூறியுள்ளார். இதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் தரவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News