தி.மு.க. அரசில் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி விளாசல்!

விடியா அரசில் போலீசாருக்கே பாதுகாப்பில்லை என்பது நிதர்சனம் மாறியிருப்பதா தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2021-11-21 12:43 GMT

விடியா அரசில் போலீசாருக்கே பாதுகாப்பில்லை என்பது நிதர்சனம் மாறியிருப்பதா தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.


திருச்சி மாவட்டம், நாவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதனை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களை பாதுகாக்கும் காவலர்களுக்கே இந்த நிலை என்றால் அப்பாவி மக்களின் கதி என்ன என்று அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், சமூக விரோதிகளால் திருச்சி, நவல்பட்டு காவல்நிலைய எஸ்.ஐ., திரு.பூமிநாதன் சமூக விரோதிகளால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், அரசின் சார்பாக 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். விரைவில் கொலையாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் கொலையாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனைபெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் இந்த விடியா அரசில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை என்பது நிதர்சனம் ஆகியிருக்கிறது. இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News