"பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால் தி.மு.கவினர் வெறியில் உள்ளனர்" - தி.மு.கவை தோலுரித்த எடப்பாடியார்!

"பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால் தி.மு.கவினர் வெறியில் உள்ளனர்" - தி.மு.கவை தோலுரித்த எடப்பாடியார்!

Update: 2021-02-08 08:00 GMT

"பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால், தி.மு.கவினர் வெறியில் உள்ளனர்" என தமிழக முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி தி.மு.கவை தோலுரித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட போரூர் பகுதியில் இரண்டாம் கட்டமாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். பெரும் மக்கள் வெள்ளத்தில் மிதந்தவாறே பேசிய அவர் கூறியதாவது, "நான் சொல்வதைதான் முதல்வர் செய்கிறார் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், நான் செய்வதையே ஸ்டாலின் சொல்கிறார். கடைசி வரை தி.மு.க சொல்லி கொண்டே இருக்க போகிறது. செய்யும் இடத்தில் அ.தி.மு.க இருக்க போகிறது" என பேசினார்.

மேலும் பேசிய அவர் கூறியதாவது, "தி.மு.க ஆட்சிக்கு வர முடியாது. சென்னை மேயராக இருந்த பொழுது ஸ்டாலின் செய்தது என்ன? செல்லும் இடங்களில் எல்லாம் ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார். வழக்கத்தை மாற்றாமல், ஊர் ஊராக பெட்டியுடன் சுற்றி வருகிறார். நான் ஒரு விவசாயி. விவசாயிகள் படும் கஷ்டங்கள் எனக்கு தெரியும் என்பதால் தான் விவசாய கடனை தள்ளுபடி செய்தேன். தேர்தல் வருவதற்கு முன்பே திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுவது தான் அ.தி.மு.க அரசு. மக்களிடம் இருந்து எடுப்பது மட்டுமே தி.மு.க மக்களுக்கு கொடுப்பது அ.தி.மு.க. கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து இல்லாமல், மக்கள் அ.தி.மு.க ஆட்சியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்" என தி.மு.எ ஆட்சியில் கட்ட பஞ்சாயத்து, கந்து வட்டி ஆகியவை தலைவிரித்து ஆடியதை சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும், "பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால், தி.மு.கவினர் வெறியில் உள்ளனர். வீட்டு மக்களை நினைத்து கொண்டே, நாட்டு மக்களை மறந்தவர்கள் தி.மு.க'வினர். கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் ஸ்டாலின், அடுத்து உதயநிதி என தி.மு.க'வில் குடும்ப அரசியல் செய்கிறது. பொய் சொல்வதற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றால், அதனை ஸ்டாலினுக்கு வழங்கலாம்" என தி.மு.க நிலையை அப்படியே எடுத்துரைத்து பிரச்சாரம் செய்தார் முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி.

Similar News