ஊழலுக்காக உலகளவில் இடம் பிடித்த கட்சி என்றால் திமுகதான்.. துணை முதலமைச்சர் ட்வீட்.!

ஊழலுக்காக உலகளவில் இடம் பிடித்த கட்சி என்றால் திமுகதான்.. துணை முதலமைச்சர் ட்வீட்.!

Update: 2021-02-17 13:25 GMT

திமுகவினர் எப்படி என்று மக்கள் புரிந்து கொண்ட காரணத்தினாலேயே அவர்களை தண்டித்துள்ளனர் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக, திமுக கட்சிகள் பரப்புரையை தொடங்கியுள்ளது. அதே போன்று அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டே பிரச்சாரத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் பம்பரம் போன்று சுழன்று கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “பஞ்சபூதத்தில் ஊழல், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு என மக்கள் உடமைகளை ஈவு இரக்கமின்றி பறிக்கும் கட்சி திமுக தான். தமிழ் நாட்டில் ஊழலை அறிமுகம் செய்ததும் இந்த திமுக தான்.
ஒவ்வொரு முறை அதிகாரத்திற்கு வரும் போதும் ஒவ்வொரு விதமான ஊழல். உலக அளவில் ஊழல் வரலாற்றில் இடம் பிடித்த ஒரே கட்சியும் ஆட்சியும் திமுக தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News