"நூறு ரூபாய் கொடுத்து கூட்டிய கூட்டம்டா இது!" கனிமொழி பிரச்சாரக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு பண விநியோகம்! வைரலாகும் வீடியோ:

Update: 2022-02-10 11:25 GMT

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக தி.மு.க எம்.பி கனிமொழி  பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், கலந்து கொண்ட பொது மக்களுக்கு ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்படும் காட்சி காணொளி ஒன்றில் பதிவாகியுள்ளது. இக்காணொளி  சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


நகர்ப்புற உள்ளாட்சித்  தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை களம் இறக்கி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களாக கட்சிகளின்  தலைவர்களும் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கெடுத்து தங்களின் வேட்பாளர்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், தி.மு.க எம்.பி கனிமொழி'யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்தபின் கூட்டத்தை விட்டு வெளியேறும் மக்களிடமும் தி.மு.க'வினர் ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யும் காட்சி, வீடியோவாக  பதிவாகியுள்ளது.

இதன் மூலம் ரூபாய் நோட்டுக்களை செலவு செய்ததால்தான் தி.மு.க கட்சி தலைவர்களின் பொதுக் கூட்டங்களுக்கும், பிரச்சார கூட்டங்களுக்கும் மக்கள் வருகின்றனர் என்பது தெளிவாக அம்பலமாகியுள்ளது. 


Full View


Tags:    

Similar News