சீண்டிப் பார்த்த அமைச்சர் செந்தில் பாலாஜி - சொத்து கணக்கு காட்டமுடியுமா என்ற அண்ணாமலை கேள்வியால் கப்சிப்

பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் கைக் கடிகாரத்தின் மதிப்பைக் கேட்டு சீண்டிப் பார்த்த அமைச்சர் செந்தில் பாலாஜி.

Update: 2022-12-18 12:49 GMT
சமூக வலைத்தளங்களில் ஒருவர் நேரடியாக கேட்க முடியாத கேள்விகளை கூட கேட்க முடியும். ஆனால் அப்படி கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட நபர் தரும் பதில்கள் வைத்து இருவருடைய விவாதமும் உண்மையா? பொய்யா? என்பதை அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் தற்பொழுது பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை சீண்டி பார்க்கும் விதமாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய ட்விட்டர் பதிவில் கேள்வி ஒன்று கேட்டு,பல்பு வாங்கி இருக்கிறார்.

குறிப்பாக இது பற்றி அவர் கேள்வி கேட்கும்பொழுது நான்கு ஆட்டுக்குட்டிகளை தன்னுடைய சொத்துக்களாக வைத்திருக்கும் அண்ணாமலை, எப்படி ஐந்து லட்சம் மதிப்புள்ள ரபேல் கைக்கடிகாரத்தை வாங்கி இருக்க முடியும்? என்று கேட்டு இருக்கிறார். இதற்கு உடனடியான பதிலை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நச் என்று கொடுத்து இருக்கிறார். "விரைவில் நாம் என்னுடைய சொத்து பட்டியலை வெளியிடுகிறேன். குறிப்பாக கடந்த பத்து வருடங்களுக்கான என்னுடைய சொத்து பட்டியலில் வெளியிட உள்ளேன்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


மேலும் அவர் கூறுகையில், "ஒரு லட்சத்திற்கு மேலான அசையா சொத்துக்களையும் நான் வெளியிட இருக்கிறேன். எத்தனை ஆடு, மாடுகளை வைத்திருக்கிறேன் என்ற விவரங்களையும் அதில் குறிப்பிட இருக்கிறேன். ஒரு பைசாவுக்கு கூடுதலாக நான் சொத்து வைத்திருப்பதை நிரூபிக்க முடியுமா? சொத்து சேர்ப்பதை நிறுபித்தால் என்னுடன் சொத்து முழுவதையும் அரசுக்கு எழுதி வைக்கிறேன். அது கூட நான் பா.ஜ.க மாநில தலைவர் என்று பதவிக்கு வரும் முன்னே, ரபேல் கைக்கடிகாரத்தை நான் வாங்கி விட்டேன். அதற்கு முறையாக வருமான வரியும் செலுத்தி இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். 
Input & Image courtesy: Dinamalar
Tags:    

Similar News