கர்நாடகாவில் கோர விபத்து.. தி.மு.க. எம்.எல்.ஏ., மகன் மற்றும் உடன் சென்ற 6 பேர் பலி !

ஓசூர் திமுக எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணா மற்றும் அவருடன் சென்றவர்கள் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-08-31 06:03 GMT

ஓசூர் திமுக எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணா மற்றும் அவருடன் சென்றவர்கள் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் பிரகாஷ். இவர் ஓசூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும் ஆவார். 


இந்நிலையில், பிரகாஷ் மகன் கருணாசாகர் உட்பட 7 பேர் ஓசூரில் இருந்து நள்ளிரவில் சொகுசு காரில் பெங்களூரு சென்றுள்ளனர். கார் பெங்களூரு கோரமங்களா பகுதியில் சென்றபோது விபத்திற்குள்ளாகியுள்ளது.



 


அப்போது காரில் இருந்த பிரகாஷ் மகனுடன் சேர்த்து 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: TopNews

https://www.toptamilnews.com/luxury-car-accident-in-koramangala-the-deceased-is-a-son-of-a-neighboring-hosur-constituency/

Tags:    

Similar News