"வெல்க தளபதி.. வெல்க உதயநிதி.." நாடாளுமன்றத்தில் கோஷமிட்ட தி.மு.க. எம்.பி.யை கண்டித்த துணை ஜனாதிபதி!

மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள் இன்று பதயேற்றுக் கொண்டனர். தமிழகத்தில் காலியாக இருந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுகவை சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, கனிமொழி, மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2021-11-29 11:50 GMT

மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள் இன்று பதயேற்றுக் கொண்டனர். தமிழகத்தில் காலியாக இருந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுகவை சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, கனிமொழி, மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது. இதனிடையே புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், திமுகவை சேர்ந்த முகமது அப்துல்லா, ராஜேஸ்குமார் மற்றும் கனிமொழி சோமு உள்ளிட்டோர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அப்போது ராஜேஷ்குமார் பதவியேற்பு உறுதிமொழிக்கு பின்னர், வெல்க தளபதி.. வெல்க உதயநிதி என கோஷமிட்டார். இதற்கு பதிலடி கொடுத்த துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு, இது போன்று பேச வேண்டும் என்றால் வெளியில் வைத்துக்கொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத்தார். அவை குறிப்பில் இது போன்ற வாசகங்கள் இடம்பெறாது என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courter: Facebook



Tags:    

Similar News