தி.மு.க. அலுவலகத்தில் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் மகேஷ்.!

திருச்சியில் திமுக அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் என்று அமைச்சர் மகேஷ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற சம்பவம் தமிழகத்தில் மற்ற உயர் அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-05-18 05:47 GMT

திருச்சியில் திமுக அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் என்று அமைச்சர் மகேஷ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற சம்பவம் தமிழகத்தில் மற்ற உயர் அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருப்பவர் மகேஷ், இவர் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக உள்ளார். இவரது மாவட்ட திமுக கட்சி அலுவலகம் திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது.


 



இதனிடையே கொரோனா தடுப்பு பணிகள் நடத்துவதாக கூறி, தனது மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் மகேஷ் ஆய்வு நடத்தியுள்ளார். அந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி போலீஸ் கமிஷ்னர் அருண் ஆகியோர் பங்கேற்றனர். அரசு அலுவலகங்களில்தான் அமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்பது விதி உள்ளது. ஆனால் இதனை மாற்றி திமுக அமைச்சர் இப்படி நடந்து கொள்வது பொதுமக்களிடையே மட்டுமின்றி, அரசு உயர் அதிகாரிகளிடமும் ஒரு விதமான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு மோசமான முன்னுதாரணம் என்று அரசு உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் கமிஷ்னர் இது போன்ற ஆய்வு கூட்டங்களில் பங்கேற்ற சம்பவம் மற்ற அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், இந்த சம்பவம் ஒரு முன்னுதாரணமாக அமைய வாய்ப்புள்ளது. இது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

Similar News