"பா.ஜ.க. தலைவரை ஆபாசமாக பேசியது தவறு, என்னை மன்னிச்சிறுங்க" - கதறும் தி.மு.க பிரமுகர்!

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திமுக உடன் பிறப்பு ஒருவர் மிகவும் ஆபாசமான முறையில் பேசினார். இது பாஜகவினர் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தது.

Update: 2021-11-15 02:51 GMT

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திமுக பிரமுகர்  ஒருவர் மிகவும் ஆபாசமான முறையில் பேசினார். இது பாஜகவினர் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், சென்னை மாநகரம் வெள்ளத்தால் சூழ்ந்திருந்தது. வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களை படகில் சென்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கு திமுக அரசுதான் காரணம் என்று அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். 


இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டிக்கு பின்னர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திமுக பிரமுகர்  ஒருவர் மிகவும் ஆபாசமான முறையில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பிரதமர் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி மிகவும் ஆபாசமான முறையில் பேசியிருந்தார். இது பற்றி விருதுநகர் மாவட்ட பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாருக்கு பின்னர் ஆபாசமான முறையில் பேசிய அவரை  காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர்கள் பாணியில் விசாரித்துள்ளனர். இதன் பின்னர் மீண்டும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் "நான் பேசியது தவறு . தயவு செய்து பாஜக மற்றும் திமுகவினர் என்னை மன்னித்து விடுங்கள்" என்று   கதறினார். இது பற்றிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றனது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் பாஜக தலைவர்களை மிகவும் ஆபாசமான முறையில் பேசி வருவது வாடிக்கையாகியுள்ளது . 

Source, Image Courtesy: Twitter


Tags:    

Similar News