ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் ஐடி ரெய்டு: பல கோடி ரூபாய் பணம் சிக்க வாய்ப்புள்ளது.!

நீலாங்கரையில் உள்ள ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2021-04-02 05:04 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் சென்றது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள திமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகளின் வீடுகளில் கடந்த ஒரு வாரமாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எ.வ.வேலு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல கோடி ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை வருமானவரித்துறையினர் கைப்பற்றி சென்றனர்.




 


இந்நிலையில், நீலாங்கரையில் உள்ள ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சபரீசன் பல கோடி ரூபாய் பணம் பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் வாக்களார்களுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். இது பற்றிய ரகசிய தகவல் தேர்தல் ஆணையம் மற்றும் வருமானவரித்துறையினருக்கு சென்றதால், தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.

Similar News