தி.மு.க. சிறு தோல்வியை சந்தித்தாலும் பா.ஜ.க. காலூன்றிவிடும்: அச்சத்தில் உளறிய ஆ.ராசா!

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சிறு தோல்வியை சந்தித்தாலும் பாஜக வலுவாக காலூன்றிவிடும் என்று திமுக எம்.பி., ஆ.ராசா பேசிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.

Update: 2022-02-12 04:07 GMT

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சிறு தோல்வியை சந்தித்தாலும் பாஜக வலுவாக காலூன்றிவிடும் என்று திமுக எம்.பி., ஆ.ராசா பேசிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.

பெரம்பலூரில் திமுக மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆ.ராசா அறிமுகப்படுத்தி வைத்து அவர்கள் மத்தியில் பேசுகையில்; இந்துக்கள் இஸ்லாமியர்கள் ஒற்றுகையாக வாழ்ந்து வருகின்றோம். திராவிட இயக்கம் உள்ள வரை தமிழகத்தில் மத நல்லிணக்கத்துடன் இருப்போம் எங்களை பிரிக்க முடியாது.

மேலும், தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை டெல்லியில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இதில் திமுக சிறு தோல்வியை சந்தித்தாலும் தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்காக அறிகுறியாக அமைந்துவிடும் என்று பேசினார். இவரது பேச்சு அங்குள்ள திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜக தமிழகத்தில் காலூன்றிவிடும் என்ற பேச்சு அச்சத்தில் பேசுவதாக அமைந்திருக்கிறது எனவும் பேசப்படுகிறது. எது எப்படி திமுக ஆட்சியை விட்டு ஒழிந்தால் தமிழகத்திற்கு நல்ல காலம் பிறக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Source, Image Courtesy: Asianetnews

Tags:    

Similar News