பள்ளிக்கூட பாடம் கூட தெரியாதா? தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு கொட்டு வைத்த பிரபல பத்திரிகையாளர்!
பள்ளிக்கூட பாடம் கூட தெரியாதா? தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு கொட்டு வைத்த பிரபல பத்திரிகையாளர்!
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க எம்.பிக்கள் நாளொரு வண்ணமும் பொழுதொரு பதிலடியாக வாங்கிக்கட்டி கொண்டிருக்கிறார்கள். இப்போது தான் தயாநிதி மாறன், பா.ஜ.க எம்பி தேஜஸ்வி சூர்யாவிடம், தடுப்பூசி விவகாரத்தில் டோஸ் வாங்கியது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.
பிறகு T.R. பாலு பிரதமரையும், இந்தியாவின் கொரானா தடுப்பூசி முயற்சிகளையும் பாராட்டி பேசிய உரை பின்னர் வைரல் ஆகியது. பிரதமர் தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் 'Go back Modi' ட்ரெண்ட் செய்த தி.மு.கவினரின் மத்தியில் இது பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
இந்த வரிசையில் தற்போது தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் சேர்ந்துள்ளார். ஜம்மு & காஷ்மீர் மறு ஒருங்கிணைப்பு மசோதா மீதான விவாதங்கள் நடந்தது.
இம்மசோதா குறித்த விவாதத்தில் தி.மு.க எம்.பி சுமதி தமிழச்சி தங்கபாண்டியன் ஜம்மு காஷ்மீரில் இருந்து அரசியல் அமைப்பு பிரிவு 370 ரத்து செய்த போதும், அதன் மாநில அந்தஸ்தை நீக்கி யூனியன் பிரதேசமாக அறிவித்த போதும் எந்தவித பொது வாக்கெடுப்பும் ஏன் நடத்தப்படவில்லை? பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படாமலேயே ஏன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கேள்விகள் எழுப்பினார்.
உண்மையில் இந்தியாவில் இத்தகைய பிரச்சினைகளுக்கு பொது வாக்கெடுப்பு என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. தி.மு.க எம்பிக்கு இது கூட தெரியவில்லை என்பது வேதனை.
இதை குறித்துப் பேசிய முன்னாள் ANI செய்திகள் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ் இது பள்ளிக் கூட பாட அறிவு, நமது எம்.பிக்கள் இத்தகைய அடிப்படை உண்மைகள் கூட இல்லாமல் பாராளுமன்றத்தில் பேசுவது வருத்தத்திற்குரிய விஷயம் என்று பேசினார். இது குறித்து பல நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.