ஆளுநரை இன்று சந்திக்கின்றனர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் !

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மற்றும் ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று சந்தித்து பேச உள்ளனர்.

Update: 2021-08-19 03:08 GMT

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மற்றும் ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று சந்தித்து பேச உள்ளனர்.

இந்த சந்திப்பானது இன்று காலை 11.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். தேவையின்றி கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி பெயரை சேர்க்கப்படுகின்றனர் என்று குற்றச்சாட்டை முன் வைத்தனர். இது பற்றிய பேச்சுகளும் பேசப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Source: Puthiyathalamurai

Image Courtesy:DT Next

https://www.puthiyathalaimurai.com/newsview/113324/EPS-and-OBS-meet-the-Governor-of-Tamil-Nadu-today

Tags:    

Similar News