பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சென்னை புறநகர் பகுதிகளில் இன்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2022-02-09 10:06 GMT

சென்னை புறநகர் பகுதிகளில் இன்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அதன்படி தாம்பரத்தில் நடைபெற்ற கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: தாம்பரம் மாநகராட்சி முதல் முறையாக தோற்றுவிக்கப்பட்டது. எனவே நமது முதல் வெற்றியை பதிவு செய்ய அதிமுகவினர் உழைக்க வேண்டும்.

கழகத்தினர் ஒற்றுமையாக பாடுப்பட்டு வெற்றியை பறிக்க வேண்டும். சிலருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும், சிலருக்கு கிடைக்காமல் இருக்கலாம். எனவே அதற்காக மனம் தளராமல் அதிமுகவின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து பல மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் இன்னும் மக்களுக்கு வழங்கப்பட் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

ஆனால் தேர்தல் அறிக்கையில் கூறிய 75 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக பொய் பேசுகிறார். இது போன்று பொய் பேசும் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றார். கடந்த கால அதிமுக அரசு செய்த சாதனையை மக்களிடம் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார்.

Source, Image Courtesy:Maalaimalar


Tags:    

Similar News