தேர்தல் கூட்டணி.. விஜயகாந்த் முடிவை ஏற்போம்.. தே.மு.தி.க. நிர்வாகிகள் தகவல்.!

தேர்தல் கூட்டணி.. விஜயகாந்த் முடிவை ஏற்போம்.. தே.மு.தி.க. நிர்வாகிகள் தகவல்.!

Update: 2021-01-30 17:40 GMT

தேமுதிகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா மற்றும் டாக்டர் இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் உட்பட 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது மற்றும் எத்தனை தொகுதிகள் வாங்குவது உள்ளிட்டவை விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் எடுக்கின்ற முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். அனைவரும் உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

இந்த முறை அ.தி.மு.க.வுடன் கூட்டணியா அல்லது தனித்து களம் இறங்கப்படுமா என்பது போக போகத்தான் தெரியவரும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சசிகலாவால் பதவிக்கு வந்தவர்கள் தற்போது அவரை நிராகரிப்பது சரியில்லை என கருத்து கூறியிருந்தார். இந்த கருத்து அதிமுகவில் சலசலப்புக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News