தேசியக் கொடியை அகற்றியவர்களை சுட்டுத் தள்ளியிருக்கனும்! அர்ஜூன் சம்பத் ஆவேசம்!

தேசியக் கொடியை அகற்றியவர்களை சுட்டுத் தள்ளியிருக்கனும்! அர்ஜூன் சம்பத் ஆவேசம்!

Update: 2021-01-29 17:45 GMT

டெல்லியில் போர்வையில் காலிஸ்தான் தீவிரவாதிகள் செங்கோட்டையில் இருந்த தேசியக்கொடியை அகற்றிவிட்டு, பிரிவினை வாதிகளின் கொடியை ஏற்றினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுத்தள்ளியிருக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

மதுரையில் மன்னர் திருமலை நாயக்கரின் 438வது பிறந்த நாள் விழாவில், அவரது சிலைக்கு அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் இஸ்லாமிய படைபெடுப்பு சமயங்களில் இடிக்கப்பட்ட கோவில்களை மீட்டெடுத்தவர்தான் திருமலை நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவர்கள்.

தமிழை வளர்த்து அதனை காத்து வந்தவர் திருமலை நாயக்கர். ஆனால் சீமான் கட்சியினர் நாயக்கர் தமிழர இல்லை என்று பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சீமானை விட அதிகமாக தமிழை நாயக்கர்கள் வளர்த்துள்ளனர்.

மேலும் டெல்லியில் அண்டை நாடுகளின் தூண்டுதலின் பேரில்தான் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தியுள்ளனர். செங்கோட்டையில் தேசியக்கொடியை அகற்றியவர்களை மத்திய அமைச்சர் அமித்ஷா சுட்டுத்தள்ளியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News