தனித்துப் போட்டி பா.ம.க.வுக்கே இழப்பு! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் !

அதிமுகவில் உட்கட்சிப் பிரச்சினை என்பதே இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Update: 2021-09-15 07:52 GMT

அதிமுகவில் உட்கட்சிப் பிரச்சினை என்பதே இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது அவர்களுக்கு மட்டுமே இழப்பு. யாருடைய கட்டாயத்தின் பேரில் தனித்துப் போட்டி என்று முடிவு எடுத்தார்கள் என தெரியவில்லை.

மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி எங்கேயும் சரியவில்லை. வலுவான எதிர்க்கட்சியாகதான் தற்போதும் அதிமுக உள்ளது. நடைபெறுகின்ற உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறுவோம். அதிமுகவை பொறுத்தவரையில் உட்கட்சிப் பிரச்சினை எவுதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News