தமிழ்நாடு மாநில பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை ஐ.பி.எஸ்., நியமனம்.!

தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக கே.அண்ணாமலை முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தேசிய பாஜக தலைமை அறிவித்துள்ளது.

Update: 2021-07-09 01:18 GMT

தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக கே.அண்ணாமலை முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தேசிய பாஜக தலைமை அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட பின்னர், தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார். 


இதனை தொடர்ந்து அவர் வகித்து வந்த மாநில தலைவர் பதவியை மற்றொருவருக்கு வழங்க கட்சி தலைமை முடிவெடுத்தது. அதன்படி அண்ணாமலை ஐ.பி.எஸ். முன்னாள் அதிகாரியை மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலையை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News