காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த 4 முன்னாள் அமைச்சர்கள்!

Update: 2022-06-05 08:16 GMT

பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த 4 பேர் தற்போது அந்தக் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப்பிடித்தது. காங்கிரஸ் படுதோல்வியை அடைந்தது. இதனால் அக்கட்சியில் இருந்து பல முக்கிய பிரமுகர்கள் விலகி பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கரும் பா.ஜ.க.வில் இணைந்தார்.

இந்நிலையில், பா.ஜ.க.வில் தற்போது மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் 4 முன்னாள் அமைச்சர்கள் இணைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமீபத்தில் ஊடகங்களில் வெளியானது. அந்த வீடியோவை தற்போது பஞ்சாப் மாநில பா.ஜ.க. தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தன்னுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பலர் பா.ஜ.க.வில் சேருவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News