கோசாலையைத்தான் தி.மு.க அரசு 'பசு பராமரிப்பு' என செய்துவருகிறது - அமைச்சர் சேகர்பாபுவின் பக்திகரமான பதில்

காசி தமிழ் சங்கத்திற்கு போட்டியாக தி.மு.க அரசு ஆட்களை அனுப்பவில்லை என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-11-21 02:02 GMT

காசி தமிழ் சங்கத்திற்கு போட்டியாக தி.மு.க அரசு ஆட்களை அனுப்பவில்லை என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது.

'தி.மு.க அரசு அனைத்து சமுதாயத்திற்கும் சமமான அரசு ஏனென்றால் அனைத்து மக்களும் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு காசிக்கு பக்தர்களை அனுப்பவில்லை என கூறினார். கோசாலையை தற்போது நாங்கள் 'பசு பராமரிப்பு' என்று அழைத்து வருகிறோம். திருவண்ணாமலையில் கோவிலில் உள்ளே கோசாலை அமைந்துள்ளதால் அதில் வெளியில் அமைக்க உத்தரவு அளித்துள்ளோம்.

ஐயப்ப பக்தர்களை சபரிமலை யாத்திரை செல்ல அவர்களுக்கு தேவையான சந்தேகங்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் பதில் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம்' என்றார்.


Source - News 7 Tamil

Similar News