ஆளுநர் மாற்றம் சிலருக்கு திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருக்கும் ! - ஹெச்.ராஜா.

Breaking News.

Update: 2021-09-12 05:30 GMT

"திருடனுக்கு தேள் கேட்டியது போல் ஆளுநர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தலைவர் அழகிரி அலறுகிறார். இதுதான் ஏன் என்று தெரியவில்லை" பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

காரைக்குடியில் உள்ள தனது இல்லத்தில் பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 6 அடி விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் சிறப்பாக செயல்பட்டார். முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் உளவுதுறையில் பணிபுரிந்தவராக புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தமிழக முதல்வர் வாழ்த்து கூறி வரவேற்றுள்ளார். ஆனால், திருடனுக்கு தேள் கேட்டியது போல் ஆளுநர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தலைவர் அழகிரி அலறுகிறார். இதுதான் ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேலை இவர் ஏதேனும் கல்லூரியில் ஊழல் செய்திருப்பாரோ? ஆளுநர் மாற்றம் எங்கோ நெறி கட்டுகிறது" என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆளுநர் மாற்றத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும், திருமாவளவனும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடதக்கது.


Source - புதிய தலைமுறை

Tags:    

Similar News