பரபரப்பான சூழலில் 2 நாட்கள் டெல்லியில் முகாமிடும் ஆளுநர் ஆர்.என்.ரவி - பின்னணி என்ன?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

Update: 2022-11-20 14:18 GMT

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

சமீபத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பிக்கள் சார்பில் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தனது அதிகார எல்லையை கடந்து செயல்பட்டு வருகிறார் எனவும் அவரை திரும்ப பெற வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில்தான் ஆளுநர் ஆ.என்.ரவி இன்று காலை திடீரென சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து இன்று காலை 10:30 மணியளவில் டெல்லி புறப்பட்டு சென்றார், இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்று அவர் நாளை வரை டெல்லியில் இருக்க உள்ளார்.

மேலும் அங்கு உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச இருக்கலாம் எனவும் மரியாதை நிமித்தமாக மத்திய அமைச்சர் யாரையாவது சந்திக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் டெல்லி பயணித்திருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.


Source - One India 

Similar News