PFI பற்றி ஆளுநர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்! இதை அரசியலாக்க கூடாது - அண்ணாமலை!

Update: 2022-05-08 09:36 GMT

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பயங்கரவாதிகள் பின்னால் இருந்து இயக்கி வருகின்றனர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து கூறியிருந்தார். இவரது கருத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், உளவுத்துறையில் சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றி இருந்தவர் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவரது கருத்தை அரசியலாக்க கூடாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். பழைய பென்சன் திட்டம் என்பது சாத்தியம் இல்லாதது என்று பா.ஜ.க. கூறியிருந்தது. நாங்கள் என்னா சொன்னோமோ அதனைதான் நிதியமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதனிடையே, கேரளா மாநிலம், கோழிக்கோடு, ஆழப்புழா, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் 66 கொலைகள் நடைபெற்றது. இந்த கொலைகளுக்கு பி.எப்.ஐ. நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது. இதனை ஆளுநர் ஆர்.என்.ரவி உளவுத்துறை அளவில் பேசி உறுதிப்படுத்தியுள்ளார். ஆளுநர் ஏற்கனவே உள்நாட்டு பாதுகாப்பு பணியில் இருந்தவர். எனவே அவர் பேசியது உண்மையாகத்தான் இருக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Twiter

Tags:    

Similar News