நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்.. விருதுநகரில் பரப்புரையில் முதலமைச்சர் உறுதி.!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ரவிச்சந்திரனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

Update: 2021-03-27 03:56 GMT

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் சிறந்து விளங்க அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக அரசு எடுக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.




 


இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ரவிச்சந்திரனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், நெசவாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி மற்றும் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.




 


மேலும், ஏழை, எளிய நெசவாளர்களுக்கு இலவசமாக பசுமை வீடு கட்டித்தரப்படும் என்று உறுதியளித்தார். அது மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாக்க நலவாரியம் அமைத்து கொடுத்தது அதிமுக அரசு என முதலமைச்சர் குறிப்பிட்டார். ஒவ்வொரு ரேசன் அட்டைதாரர்களுக்கு வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசமாக அளிக்கப்படும். மாதம் ரூ.1,500 வழங்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

Similar News