"தி.மு.கவிற்கு ஒரு சீட்டு கூட கிடைக்க கூடாது! அப்படி செய்யவில்லை என்றால் விபூதி பூசுவதே போலி" - கொதிக்கும் ஹெச்.ராஜா!

"தி.மு.கவிற்கு ஒரு சீட்டு கூட கிடைக்க கூடாது! அப்படி செய்யவில்லை என்றால் விபூதி பூசுவதே போலி" - கொதிக்கும் ஹெச்.ராஜா!

Update: 2021-01-30 07:59 GMT

"தி.மு.கவிற்கு ஒரு சீட்டு கூட கிடைக்க கூடாது! அப்படி செய்யவில்லை என்றால் விபூதி பூசுவதே போலி" என ஹெச்.ராஜா கொதிப்பாக பேசியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச் .ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது 2021 சட்டமன்ற தேர்தலை பற்றி பேசுகையில் அவர் கூறியதாவது, "தேசத்துரோகி, ஊழல் பெருச்சாளி ஆ.ராசாவுக்கு என்னைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை. 2ஜி வழக்கில் தண்டனை  பெற்று விரைவில் ஆ.ராசா திஹார் சிறையில் இருப்பார். ஸ்டாலினையே வேல் தூக்க வைத்த முருகப் பெருமானின் சக்தி அற்புதம் ஆகும். தமிழகத்தில் முருகனின் புரட்சி ஆரம்பமாகிவிட்டது" என்றார்.

மேலும் பேசிய அவர் கூறியதாவது, "பக்தர்கள் தைப்பூசத்துக்குப் பழனிக்குச் சென்றால் மட்டும் போதாது. திருநீறு பூசினால் மட்டும் போதாது. முருகனை இழிவுபடுத்தும் கறுப்பர் கூட்டத்துக்கு உதவி செய்யும் ஸ்டாலினையும் தி.மு.க'வையும் ஒரு சீட்டில் கூட வெற்றி பெறவிடக் கூடாது. இப்படிச் செய்யவில்லை என்றால் பழனிக்குப் போவதோ, திருநீறு பூசுவதோ போலித்தனமாகிவிடும்" என ஆவேசமாக கூறினார்.

Similar News