ஹெச்.ராஜா, குஷ்பு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தேசிய அளவில் புதிய பொறுப்பு!

பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர்களாக குஷ்பு, ஹெச்.ராஜா இரண்டு பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தேசிய பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-07 12:37 GMT

பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர்களாக குஷ்பு, ஹெச்.ராஜா இரண்டு பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தேசிய பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாஜகவில் தேசிய செயற்குழுவில் ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி உள்ளிட்ட 80 பேர் உள்ளனர். 


இந்நிலையில், இந்த குழுவுக்கு 50 சிறப்பு அழைப்பாளர்கள், 179 நிரந்தர அழைப்பாளர்களை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமனம் செய்துள்ளார். அதில் தமிழகத்தை சேர்ந்தவர்களான சிறப்பு அழைப்பாளர்களாக நடிகை குஷ்பு, ஹெச்.ராஜா இரண்டு பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதே போன்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தேசிய பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதியதாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News