ஹெச்.ராஜா'வால் கடுப்பாகி போன 'செயல்பாபு' !

Update: 2021-10-12 13:00 GMT

ஹெச்.ராஜா'வின் பேச்சால் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடுப்பாகியுள்ளார்.


பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் இன்று அறநிலையத்துறை வசம் கையகப்படுத்தப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, "காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான இடங்கள் இதுவரை 132 கிரவுண்டு இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தி உள்ளது. இன்று 250 கோடி மதிப்பிலான 38 கிரவுண்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலைய துறை தன்வசபடுத்தி உள்ளது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹெச்.ராஜா வின் இந்து சமய அறநிலையத் துறை மீதான ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் இந்து சமய அறநிலைத்துறை கருத்தில் கொள்ளாது. எதையோ பார்த்து ஏதோ குறைக்கிறது என்று நினைத்துக்கொள்வோம். ஹெச்.ராஜா மத்திய அரசின் பிரதிநிதி அல்ல" என்றார்.


இதற்கு முன் குயின்ஸ்லேண்ட் அமைந்துள்ள இடம் அறநிலையத்துறை'க்கு சொந்தமானது அதனை மீட்க அறநிலையத்துறை'க்கு தைரியம் உள்ளதா என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியது குறிப்பிடதக்கது.


Source - ASIANET NEWS

Tags:    

Similar News