ஹிட்லர், முசோலினியின் மறு உருவமாக ஸ்டாலின் உள்ளார்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Update: 2022-03-12 05:28 GMT

ஹிட்லர், முசோலினியின் மறு உருவம் போன்று முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது எனவும் கூறினார்.

சென்னை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மூன்று வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரை அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்று அழைத்து சென்றனர். இதன்பின்னர் அங்கு இருந்த செய்தியாளர்கள் மத்தியில் ஜெயக்குமார் பேசுகையில், பொய் வழக்கு போட்டு திமுக தன்னை சிறையில் தள்ளியது என்று குற்றம்சாட்டினார். கள்ள ஓட்டு போட முயன்ற ரவுடியை தடுத்து நிறுத்தியதால்தான் தன்னை கைது செய்தனர்.

மேலும், 10 வழக்கு இருந்தால் மட்டும்தான் திமுகவில் உறுப்பினராக இருக்க முடியும் எனவும் கடுமையாக சாடினார். ஹிட்லர், முசோலினியின் மறு உருவமாக ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Source, Image Courtesy: One India Tamil

Tags:    

Similar News