"பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறேன்" - சுப்ரமணிய சுவாமி அதிரடி
தி.மு.க தினம் ஒரு பொய் சொல்வதாக சுப்பிரமணியசாமி கிண்டலாக தெரிவித்துள்ளார்.
தி.மு.க தினம் ஒரு பொய் சொல்வதாக சுப்பிரமணியசாமி கிண்டலாக தெரிவித்துள்ளார்.
மதுரையில் மீரா ஹிந்து சங்க மாநில பொதுச் செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்த சுப்பிரமணிய சுவாமியின் 83 வது பிறந்தநாள் விழா நடந்தது. அந்த விழாவில் பேசிய அவர் கூறியதாவது, 'நாட்டின் வளம் கலாச்சாரத்தை ஆங்கிலேயர் அழித்ததால் பொருளாதாரத்தில் நாம் பின்தங்கிவிட்டோம் தற்பொழுது மீண்டும் சொந்த காலில் நிற்கும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். சமஸ்கிருதத்தில் ஆரியம் என்ற வார்த்தை கிடையாது ஆங்கிலேயர் தான் பிரிவினை ஏற்படுத்த புகுத்திய தான் இந்த ஆரியம் என்ற வார்த்தை.
ஆங்கிலேயர்கள் ஆரியம், திராவிடம் என்ற பிரிவினையை உண்டாக்கினர். அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் வெள்ளைக்காரன் கொடுத்த அதிகாரத்தின் அடிப்படையில் தான் வந்தது. தமிழகத்தில் 32,000 கோவில் தி.மு.க அரசு கையில் இருப்பதை விடுதலை செய்ய வேண்டும்' என அவ்வாறு பேசினார்
மேலும் பெட்ரோல் குண்டு வச்சு சம்பவங்களை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த கலவர சம்பவத்திற்கு தமிழக அரசை டிஸ்மிஸ் நடவடிக்கை எடுத்து வருகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.