"ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இளையராஜாவை சந்தித்துள்ளது" பதறி துடிக்கும் திருமாவளவன்!

Update: 2022-04-16 13:19 GMT

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இளையராஜாவை சந்தித்திருக்கலாம் என்று நினைக்கிறேன் என விசிக தலைவர் திருமாவளவன் பதற்றத்தில் கூறியுள்ளார்.

சென்னை, எழும்பூரில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது: இஸ்லாமியர்களுக்காக நாடாளுமன்றத்தில் பேச எழும்போதெல்லாம் பதற்றம்மாக இருப்போம். மற்ற எம்.பி.க்கள் பேசிய பின்னர் பேசுவேன். இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுப்பதற்கு இஸ்லாமியர்கள் அல்லாத சமூகத்திற்கும் அக்கறை உள்ளது. மேலும், சமூகத்தில் மக்களோடு நெருக்கம் காட்டுபவர்களை சந்திப்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம். அதே போன்றுதான் இசைஞானி இளையராஜாவை ஆர்.எஸ்.எஸ் சந்தித்திருக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தில் பாஜகவுக்கு பட்டியலின மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால் எங்கே தனக்கு வரவேண்டிய வாக்குகள் அனைத்து பாஜகவுக்கு போய்விடுமோ என்ற பதற்றத்தில் இது போன்ற கருத்துக்களை திருமாவளவன் முன்வைத்து வருகின்றார். இளையராஜாவை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சந்தித்து ஆதரவு அளிக்க கேட்டுக்கொண்டுள்ளது என்ற விமர்சனத்தை திருமாவளவன் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Zee News

Tags:    

Similar News