நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தை தடை செய்ய வேண்டும்- டெல்லியில் அர்ஜுன் சம்பத் ஆர்ப்பாட்டம்!

டெல்லியில் அர்ஜுன் சர்பத் அவர்கள் தலைமையில் நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-10-06 02:53 GMT

தமிழகத்தில் பா.ஜ.கவினர் மீது பொய் வழக்கு பதிவு செய்யும் தி.மு.க அரசின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சரிடம் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் புது டெல்லி துறை அமைச்சர் சந்தித்து மனுவை அளித்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் சமீபமாக பா.ஜ.கவின் மீதும் மற்றும் இந்து கட்சிகள் மீதும் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. பா.ஜ.கவினரின் வீடுகள் அலுவலகங்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றது. பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன.


பா.ஜ.க நிர்வாகிகள் பலர் பொய் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இது குறித்து மத்தியில் அமைச்சகம் விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுறுத்தியும், மேலும் சமீபத்தில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வாயிலாக தி.மு.க அரசு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது. இது குறித்த அமைச்சரிடம் எடுத்துக் கூறினார். இந்து பெண்கள் குறித்த அவதூறாக பேசிய தி.மு.க எம்.பி ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளோம்.



இதேபோல் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் இலங்கை திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் கோவிலில் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் படியும், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் தனியாக சந்தித்து மனு அளித்துள்ளோம். அதில் சத்திரபதி சிவாஜி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிலை அமைக்கும் படி கோரி இருக்கிறோம். இவ்வாறு அவர் தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: puthiyathalaimurai

Tags:    

Similar News